சீர்காழி, மார்ச் 7- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செல்லும் பிரதான கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒருவாரம் ஆகிறது. கடந்த ஒரு வாரமாக உடைந்த குழாய் பகுதியிலிருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. கொள்ளிடம் பகுதியிலுள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு சென்று சேர வேண்டிய குடிநீர் குழா யில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடியிருப்புகளுக்கு குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆனால் குழாயிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் தண்ணீர் வீணாகிறது. எனவே குடிநீர் வீணாகாமல் அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வகையில் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடி யாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.