தஞ்சாவூர், நவ.3 - மின்வாரிய ஆணை எண் 2 ஐ ரத்து செய்திட வேண்டும். இ.டெண்டர் முறையை கைவிட வேண்டும். மின் வாரியத்தை 3 ஆக பிரிக்கக்கூடாது. பொறியாளர்கள், அலுவலர் கள், பகுதிநேர பணியாளர் கள், ஓய்வு பெற்றவர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு நிலுவைத்தொகை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக் கைக்குழு சார்பாக ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாயிலில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொறியாளர் சங்க மாநில நிர்வாகி சுந்தர்ராஜ் தலை மை வகித்தார். சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் ராஜா ராமன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் காணிக்கை ராஜ், பொன்.தங்கவேல், ராகவன், பாலா, ராஜா, தன சேகர், ராமகிருஷ்ணன், சுந்தர் ஆகியோர் பேசினர். மாவட்டத்தின் பல்வேறு அலுவலகங்களிலும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கரூர் கரூர் மின்வாரிய அலு வலகம் முன்பு மின் ஊழி யர் மத்திய அமைப்பின் கரூர் மண்டல செயலாளர் க.தனபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பல்வேறு சங்க நிர்வாகி கள் முருகவேல், பால்ராஜ், ராஜகோபால் ஆகியோர் பேசினர். திருச்சிராப்பள்ளி திருச்சி மன்னார்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மத்திய அமைப்பின் மாநில துணை தலைவர் ரெங்கராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு சங்க நிர்வாகிகள் அந்தோனிபெடவராஜ், கண்ணன், சத்தியநாராயணன், செல்வராஜ், அருள். பரம சிவம் ஆகியோர் பேசினர். இதேபோன்று மணப் பாறை, லால்குடி, துறையூர், திருவெறும்பூர் வெள்ள னூர், கைலாசபுரம், மண்ணச் சநல்லூர் செம்பட்டு சமய புரம் பொன்னகர், தென்னூர் உட்பட 50 பிரிவு அலுவல கங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஊதிய உயர்வு ஒப்பந்தத் தில் நிலுவையில் உள்ள அலவன்ஸ்க்காக அமைக் கப்பட்ட குழு பேச்சுவார்த் தையை துவக்க வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டங்களில் வலி யுறுத்தப்பட்டது.