districts

img

மாற்று வீடு, சாலை, குடிநீர், மின்வசதி செய்து தராமல்

கும்பகோணம், செப்.23 - மாற்று வீடு, சாலை, குடிநீர்,  மின்சாரம் போன்ற அடிப்படை வசதி களை செய்து தராமல் 30 ஆண்டு களாக குடியிருக்கும் மக்களின் வீடு களை இடிக்கக் கூடாது என வலி யுறுத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் பகுதி முழுவதும் நீர் நிலைகளில் குடியிருப்பவர்களை அகற்ற வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் நீர் நிலைகளில் குடியிருக்கும் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களை அப்புறப்படுத்தும் பணியில் வரு வாய்த்துறை மற்றும் பொதுப் பணித் துறையினர், மாநகராட்சி அதிகாரி கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 30 ஆண்டு கால மாக குடியிருந்த வீடுகளை திடீ ரென்று காலி செய்ய வற்புறுத்தி,  புல்டோசர் வைத்து இடிப்பதால்,  பொதுமக்கள் நடுத்தெருவில்  நிற்கின்றனர். பாதிக்கப்பட்டவர் களுக்கு மாற்று இடம் கொடுக்காமல், வீடு கட்டி கொடுக்காமல், மாற்று இடத்திற்கான சாலை, குடிநீர், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் செய்து  கொடுக்காமல் வீடுகளை இடிப்பதை  நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் கும்பகோணம் கோட்டாட்சி யர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கு பொது மக்கள் கூடினர். அப்போது, காவல்துறையினர் காத்திருப்புப் போராட்டத்திற்கு அனு மதி வழங்காமல் கும்பகோணம்  வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சி யரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத் தனர். கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் தெரிவித்ததாவது: கும்பகோணம் மாநகராட்சிப் பகுதிகளில் நீர்நிலை ஓரத்தில் நீண்ட காலமாக 300-க்கும் மேற்பட்டோர் குடும்பத்தோடு குடியிருந்து வரு கின்றனர். உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைவரையும் உட னடியாக காலி செய்ய உத்தரவிடு கின்றனர். மேலும், வருவாய்த் துறை சார்பில் புல்டோசர் கொண்டு  அதிரடியாக அனைத்து வீடுகளை யும் இடிக்கும் பணி கடந்த செப்டம் பர் 12 ஆம் தேதி முதல் நடை பெற்று வருகிறது. இதைக் காரணம் காட்டி நீர்நிலை களின் ஓரத்திலும், நீர் நிலைகளில் தண்ணீர் போக்குவரத்து இல்லாத இடங்களிலும் 30 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களின் வீடு களை இரவோடு இரவாக காலி  செய்யும் நடவடிக்கையில் அதிகாரி கள் ஈடுபடுகின்றனர். கும்பகோணம்  அருகே உள்ள சேசம்பாடி கிரா மத்தில் மாற்று இடம் கொடுக்கிறோம் என்று பட்டா போன்று பேப்பர் கொடுத்துவிட்டு, மறுநாள் காலை யில் வருவாய்த்துறை மற்றும் மாநக ராட்சி அதிகாரிகள் காவல்துறை யோடு நேரில் சென்று புல்டோசர் மூலம் குடியிருப்புகளை அதிரடி யாக இடித்து வருகின்றனர்.  இதனால் அதிர்ச்சியடைந்த ஏழை-எளிய மக்கள், உறங்கு வதற்கு உண்பதற்கு வழியில்லா மல் குழந்தைகளோடு பரிதவிக் கின்றனர். ஆகவே வீடுகளை இடித்து அப்புறப்படுத்துவதற்கு முன்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடி தண்ணீர், சாலை, மின்சாரம், போக்கு வரத்து உள்ளிட்ட அனைத்து வசதி களுடனும், பட்டாவுடனும் கூடிய  வீடுகளை கட்டித் தர வேண்டும். தற்போது வசிக்கும் வீடுகளை இடிப் பதற்கு அவகாசம் வழங்க வேண்டும். வீடுகளை அப்புறப்படுத்துவதற்கு நிவாரணம் வழங்க வேண்டுமென”  வலியுறுத்தப்பட்டது. அதற்கு கோட்டாட்சியர் ஹ்ருத்யா விஜயன் மற்றும் வட்டாட்சி யர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரி கள், மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து முடிவெடுக்கப்படும் என்றனர். இதனை தொடர்ந்து தற்கா லிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப் பட்டது. காத்திருப்பு போராட்டத்தின் அடிப்படையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும்  பாதிக்கப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.