தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஈச்சங்குடி, சூலமங்களம், ராஜகிரி, மேல கபிஸ்தலம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நெட்டை ரக தென்னங்கன்றுகளை திமுக பாபநாசம் தெற்கு ஒன்றியச் செயலாளர் நாசர் வழங்கினார். இதில், பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் சுஜாதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.