districts

img

காட்டாத்தியில் அரசுடைமை வங்கி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

தஞ்சாவூர், ஏப்.16-  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும், திமுக வேட்பாளர் ச.முரசொலி, திரு வோணம் வடக்கு, தெற்கு ஒன்றி யத்தில், திங்கள்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். பேராவூரணி சட்டமன்றத் தொகு திக்குட்பட்ட காட்டாத்தி, உஞ்சிய விடுதி, வல்லம்பக்கொல்லை, அதம்பை வடக்கு, அனந்த கோபால புரம், காயாவூர், வெங்கரை, கோட்டைக் காடு, தோப்பநாயகம், சென்னிய விடுதி,  நெய்வேலி வடபாதி, நெய்வேலி தென்பாதி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் வாக்குச் சேகரித்து பேசினார்.  அப்போது அவர் பேசுகையில், “காட்டாத்தியில் பொதுமக்கள் கோரிக் கையை ஏற்று அரசுடமை வங்கி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். வல்லம்பக்கொல்லை பகுதியில் பகுதி  நேர அங்காடியும், சாலை வசதியில் 75 விழுக்காடும் அமைத்து தரப்பட்டுள்ளது. நலத்திட்டங்களை நாம் செய்து தர, மத்தியில் நமக்கு ஆதரவான அரசு  அமைய வேண்டும். திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி  வருகிறது. சொன்ன திட்டங்கள் மட்டும் இல்லாமல், சொல்லாத திட்டமான காலை  உணவு திட்டம் வரை செயல்படுத்தி வரு கிறது.  அதம்பை ஏரி தூர்வாரப்படும். அனந்தகோபாலபுரம் அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தரப்படும். வெகு  விரைவில் இப்பகுதியில் துணை மின் நிலை யம் கொண்டு வரப்படும். பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டு அவற்றை நிறைவேற்றி தருவேன்” என்றார். பிரச்சாரப் பயணத்தில் தஞ்சை மத்திய  மாவட்டச் செயலாளர் துரை. சந்திரசேக ரன், தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலா ளர் கா.அண்ணாதுரை, தலைமை செயற் குழு உறுப்பினர் நா.அசோக்குமார் உட்பட  கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். பிரச்சாரத்தில், வெங்கரையில் மாட்டு  வண்டியில் ஏறி, வண்டியை ஓட்டியவாறு முரசொலி வாக்குச் சேகரித்தார். நெய்வே லியில் நாட்டியக் குதிரைகள் நடனமாட,  சாரட் வண்டியில் வரவேற்பு அளிக்கப் பட்டது.