districts

img

தஞ்சாவூர், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியங்களை இரண்டாக பிரித்திடுக!

தஞ்சாவூர், டிச.13 -  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத் தின் தஞ்சாவூர் மாவட்ட 8 ஆவது பேரவை செவ்வாய்க் கிழமை மாலை, தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் இரா.இராசன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பா.ஆண்டனி ஜான் பிரிட்டோ வரவேற்றார். மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்பாளர் யோ.ஜெயந்தி அஞ்சுலி  தீர்மானம் வாசித்தார். மாவட்டச் செயலாளர்  கை.கோவிந்தராஜன் வேலை அறிக்கையும்  மாவட்டப் பொருளாளர் ந.தேசிங்கு ராஜன் வரவு-செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர்.  ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பால்ராஜ் நிறைவுறையாற்றினார். மாவட்ட தணிக்கையாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.  “பொதுமக்கள் நலன் கருதியும், வளர்ச்சித் திட்டப் பணி களை திறம்பட செயல்படுத்திடவும், தஞ்சாவூர், ஒரத்த நாடு ஊராட்சி ஒன்றியங்களை இரண்டாக பிரிக்க வேண்டும். கும்பகோணம் கோட்டத்தில் புதிதாக ஒரு ஊராட்சி ஒன்றியத்தினை உருவாக்க வேண்டும். 5000 மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள பெரிய ஊராட்சி களை இரண்டாக பிரிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் அனைத்து வாய்க்கால்களையும் தூர் வாரு வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.