பருவமழை பரவலாக பெய்து வருவதால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திருவெண்காடு ஊராட்சி சின்னப்பெருந்தோட்டம் பகுதி விவசாய நிலங்களில் மழை நீர் புகுந்து நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குநர் வி.அமுதவள்ளி நேரில் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உள்ளிட்டோர்.