திருச்சி மாவட்டத்தில் சாலையோரங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் நபர்கள் மற்றும் குழந்தைகள் மீட்கப்பட்டு, திருச்சி கலையரங்கத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திங்கள்கிழமை அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனைகள் வழங்கி, பாதுகாப்பும், பராமரிப்பும் தேவைப்படும் குழந்தைகளை இல்லத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்வது தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டார்.