districts

img

பாம்புகடித்து உயிரிழந்த செல்வன் குடும்பத்திற்கு மாவட்ட ஆட்சியர் நிதி உதவி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நடுக்கரை மேலபாதி கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் செல்வன் (8), இவர் டிசம்பர் 30 அன்று தனது வீட்டிலிருந்து கன்னிகோயில் அருகில் சென்றபோது பாம்புகடித்து உயிரிழந்தார். அக்குடும்பத்திற்கு நிவாரண உதவியாக, மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையை இறந்த சிறுவனின்  குடும்பத்தினரிடம் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா புதனன்று வழங்கினார்.