districts

img

தீக்கதிர் அரங்கில் மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள தீக்கதிர் அரங்கத்திற்கு ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா வருகை தந்து வாழ்த்து தெரிவித்தார்.  நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட புத்தகக் கண்காட்சியில் 71 ஆவது எண்ணில் தீக்கதிர் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தீக்கதிர் நாளிதழை அறிமுகம் செய்வது, புதிய சந்தாக்களை சேர்ப்பது, புத்தக விற்பனை உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புத்தகக் கண்காட்சியை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் மு.அருணா தீக்கதிர் அரங்கிற்கும் வருகை தந்தார்.  அப்போது தீக்கதிர் பணிகளைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.பொன்னி, இந்திய வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மகாதீர், இந்திய மாணவர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் மகாலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.