districts

img

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மாவட்ட நிர்வாகம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை சார்பில் மதுப் பழக்கம், போதை பொருட்கள் ஆகியவற்றால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பேரணி கலை நிகழ்ச்சியுடன் நடைபெற்றது. பேரணிக்கு பொன்னமராவதி வட்டாட்சியர் சாந்தா தலைமை வகித்தார். கோட்ட கலால் அலுவலர் ரங்கராஜன் மற்றும் வருவாய்த் துறையினர், பொதுமக்களிடம் போதைப் பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.