நலத்திட்ட உதவிகள் வழங்கல் மயிலாடுதுறை, ஜூன் 24 - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி தலைமை யில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 563 மனுக்கள் பெறப் பட்டன. பின்னர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திற னாளிகளுக்கு தலா ரூ.13,500 மதிப்பில் ஸ்மார்ட் போன்களை யும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.5479 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களையும், தாட்கோ துறையின் மூலம் 5 தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய உறுப்பி னர் அடையாள அட்டையையும் மாவட்ட ஆட்சியர் வழங்கி னார்.