புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், பூவற்றக்குடி சரகம், மேற்பனைக்காடு வருவாய் கிராமத்தில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளின் சார்பில், 314 பயனாளிகளுக்கு ரூ.2.14 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.