அறந்தாங்கி, பிப்.17- மீமிசல் அருகே குமரப் பன்வயல் குளத்தில் பழ மையான 5 சாமி சிலை கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கியை அடுத்த மீமிசல் அருகே குமரப்பன்வயல் கிரா மத்தில் உள்ள குளத்தில் அதே பகுதியைச் சேர்ந்த விஜய்(30), கணேசன்(32), சந்தோஷ் (21) ஆகிய மூன்று பேரும் குளித்துக் கொண் டிருந்தனர். அப்போது குளத்தின் அடிப்பகுதி யில் சிலை கிடப்பது தென் பட்டுள்ளது. இதையடுத்து வெளியே எடுத்து பார்த்த போது, அது பழமை யான கல்லால் செய்யப் பட்ட சாமி சிலை என தெரிந்தது. அதன் அரு கருகே மொத்தம் 5 சாமி சிலைகள் கண்டெடுக்கப் பட்டன. இதுகுறித்து மீமிசல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலை யில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிலை களை கைப்பற்றி மண மேல்குடி வருவாய் துறை யினரிடம் ஒப்படைத்தனர்.