districts

img

புதுக்கோட்டை அருகே புத்த தர்மசக்கரத்தூண் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை, பிப்.8- புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் அருகே புதுவாக்காடு ஊரணிக்கரை அருகே நிலத்தை சீர் செய்யும் போது தர்மசக்கர புடைப்புச் சிற்  பத்துடன் தூண் கல் வெளிப்பட் டுள்ளது.  இதனைத்தொடர்ந்து சமூக  ஆர்வலர் எக்ஸ்.எடிசன் மற்றும்  புதுவாக்காடு கிராம இளைஞர் கள் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்திற்கு தகவலளித்த னர். இந்த தூண் புடைப்பு சிற்பம்,  புத்த சமயத்தில் மிக முக்கிய சின்  னமாக கருதப்படும் ‘தர்மசக்கரம்’ என புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தினர் தெரிவித்தனர்.   இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக  நிறு வனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறுகையில், ‘‘தர்மசக்கரம் அல்  லது அறவாழி என்பது புத்தம், சம ணம் மற்றும் வைணவ மதங்களில் முக்கிய சின்னமாக உள்ளது. தற்  போது அடையாளப்படுத்தப்பட் டுள்ள தர்மசக்கரம் எட்டு ஆரங்க ளுடன் ஒரு தாங்கியில் வைக்கப் பட்டிருப்பது போல பொறிக்கப் பட்டிருக்கிறது.  மேலும் தாங்கிப்பலகையில்  சக்கரத்திற்கு அடிப்புறத்தில், தெளிவற்ற மான் உருவம் இரு மருங்கிலும், மையத்தில் விளக்கு அமைப்பும் காட்டப்பட்டிருக் கிறது. இது புத்த தர்மசக்கரத் தோடு தொடர்புடையது என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.  மேலும் சக்கரத்தின் மேல்புற மாக ஒரு ஒளிக்கீற்று காட்டப்பட்டி ருக்கிறது. இது புத்தருக்கு காட் டப்படும் ஒரு முக்கியமான அடை யாளமாகும். வைணவ சக்கரங்க ளில் இந்த தீச்சுவாலை அமைப்பு  மூன்று புறங்களில் காட்டப்படும்,  ஆனால், இந்த புடைப்பு சிற்  பத்தில் மேல்புறம் மட்டும் காட்டப்  பட்டிருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த தூண் புடைப்பு சிற்பத்தில் தெளிவான கால வரை யறையைக்கொண்ட எழுத்து  பொறிப்புகள் ஏதுமில்லாவிட்டா லும், ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கி பதினொன்றாம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டதாக கருதலாம். 

புத்தரின் முதல்  உபதேச நினைவாக...

தர்ம சக்கரத்தின் எட்டு ஆரங்  கள் சொல்லும் தத்துவம் என்ன வெனில், சரியான உயிரோட்ட மான வாழ்க்கை, சரியான பார்வை, சரியான முயற்சி, சரியான கவ னம், சரியான நோக்கம், சரியான நினைவாற்றல், சரியான செயல், சரியான பேச்சு என்பதாகும். புத் தர் முதன்முதலில் சாரநாத்தில் மான் பூங்காவில், ஐந்து துறவி களுக்கு உபதேசம் செய்த நிகழ்ச்சி,  முதல் தர்மசக்கர சுழற்சியாக கொள்ளப்படுகிறது. இதை குறிக்  கும் வகையிலே, தர்மசக்கரத்தின் இரு புறமும் மான்கள் காணப்படு வதுண்டு.  புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தர்ம சக்கரத்தூண் நீர் நிலைக்கு  அருகாமையில் கிடைத்துள்ள தால், மக்களுக்காக இந்நீர் நிலை யை ஏற்படுத்தியவர்களால் நட்டு விக்கப்பட்டிருக்கலாம் என்பதை அனுமானிக்க முடிகிறது. மேலும் இதுபோன்ற அடையாளத் தூண் கள் நிலங்களின் எல்லைகளை குறிப்பதற்கும் தாம் செய்வித்த  பொதுப்பணியை, எந்நோக்கத் திற்காக செய்தோம் என்பதை வெளிப்படுத்துவதற்காகவும், நட்டுவிக்கும் பழக்கம் நடைமுறை யில் இருந்துள்ளது.  இது பௌத்த துறவிகள் அல்லது அந்த மதத்தை பின்பற்றி யவர்கள் இப்பகுதியில் இருந்தி ருப்பதை உறுதி செய்வதாக இருக்  கிறது. கடற்கரை அருகாமை கிரா மமாக இது இருப்பதோடு, ஆவு டையார் கோவில் பகுதியிலுள்ள கரூர் கிராமத்திலும், மணமேல்  குடி அருகே   வன்னிச்சிப்பட்டி ணம் எனும் ஊரில் புதுக்கோட்டை வரலாற்று அறிஞர் ஜெ.ராஜாமுக மது அவர்களால் 25 ஆண்டு களுக்கு முன்பு கண்டறியப்பட்டு, காணாமல் போன புத்தர் சிற்பம் கண்டறிந்த இடமும், கடலோர  இலங்கைத்தீவும் அருகாமை பகுதிகளாக இருப்பதால், பௌத்  தம் இப்பகுதியில் பரவியிருந் ததை வெளிப்படுத்தும் சான்றாக இத்தூண் கண்டுபிடிப்பை கருத முடிகிறது’’ என்றார்.