மயிலாடுதுறை, நவ.16- அதீத கனமழையால் கடு மையாக பாதிப்படைந் துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்ட மாக அறிவிக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரமும், விவசாய தொழிலாளர் குடும்பங்க ளுக்கு குடும்ப அட்டைக்கு ரூ.10 ஆயிரம் ரூபாயும் நிவா ரணமாக வழங்க வேண்டும். சீர்காழி மற்றும் தரங் கம்பாடி தாலுகாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவா ரணத் தொகையை மயிலாடு துறை மற்றும் குத்தாலம் தாலுகாக்களுக்கும் சேர்த்து அறிவிக்க வேண்டும். பாதிக் கப்பட்ட பகுதிகளை பார்வை யிட்டு பயிர் சேதங்கள் குறித்து உடனடியாக கணக் கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, மயிலாடு துறை பழைய பேருந்து நிலை யம் அருகில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் புத னன்று சாலை மறியல் போராட் டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.சிம்சன் தலைமை வகித்தார். விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட செயலா ளர் ஜி.ஸ்டாலின், விவசாயி கள் சங்க மாநிலக் குழு உறுப் பினர் குணசுந்தரி, சங்க பொறுப்பாளர்கள் இயற்கை விவசாயி ராமலிங்கம், வைர வன் உள்ளிட்ட பொறுப்பா ளர்கள், கரும்பு விவசாயிகள் சங்க முருகன், வீரசோழன், விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் வாணிதாஸ், டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் அன்பழகன் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவ சாயிகள் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.