districts

img

பணியிட மாற்றத்தை கண்டித்து பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

பெரம்பலூர், நவ.4 - பணியிட மாற்றம் செய்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், பணி மாறு தல் வழங்கக் கோரியும் சத்துணவு அமைப்பாளர் குடும்பத்துடன் தர்ணா வில் ஈடுபட்டார். பெரம்பலூர் மாவட்டம், ஆத்தூர் வட்டம் பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்த வர் ஜெயந்தி(42). இவர் பாடாலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் சத்துணவு அமைப்பாளராக பணி யாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த  3 மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெங்கநாத புரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு காரணமும் இன்றி பணியிட மாற்றம் செய்ததை கண்டித்தும், பணி யிட மாறுதல் வழங்க கோரியும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  குடும்பத்துடன் கோரிக்கை பதாகை ஏந்தி திங்கள் கிழமை தர்ணாவில் ஈடுபட்டனர். இதனிடையே இவர்களின் போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்த, தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்கம் மற்றும் நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.  தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேரடி யாகச் சென்று மனு குறித்து நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த தன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர்.