districts

img

செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடற்புழு நீக்க பயிற்சி முகாம்

தஞ்சாவூர், பிப்.8-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதியில் இயங்கி வரும் தரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், குடற்புழு நீக்க விழிப்புணர்வு மற்றும் ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  முகாமிற்கு பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் அருள் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் கௌசிகா முன்னிலை வகித்தார். பேராவூரணி வட்டாரத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த இருபால் ஆசிரியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  \மருந்தாளுநர் சரவணன், சமுதாய செவிலியர் மணிமேகலை, பகுதி சுகாதார ஆய்வாளர் அன்னக்கிளி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திருப்பதி, சுகாதார ஆய்வாளர் தவமணி மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.