தஞ்சாவூர் ஆட்சியர் ஆய்வு
தஞ்சாவூர், மே 2-
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின்னர் ஆட்சியர் கூறிய தாவது:-
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் நாடியம்பாள்புரம் பாளமுத்தி ஏனாதி அருகே சுக்கிரன்பட்டி வடிகால் வாய்க்கால் நீர்வளத் துறை சார்பில் தூர்வா ரும் பணி நடைபெற்று வருவது குறித்தும், பொன்னவராயன் கோட்டை அருகே நசுவி னியாறு வடிவேல் நீர்வளத்துறை சார்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரும் விபரங்கள் சிறப்புச் செயலியில் பதி வேற்றப்பட்டு பணிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். இதன் மூலம் மாவட்டம் தோறும் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் வடிகால் மற்றும் வாய்க்கால்களில் விரைவாகவும் சீராக வும் தூர்வாரப்படும். பணிகளை விரைவாக, தரமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என சம்பந்தப் பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது” என்றார்.
முன்னதாக பட்டுக்கோட்டையில் உள்ள மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார் பில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து பயிற்றுநர்களுக்கான பயிற்சி யினை துவக்கி வைத்து பயிற்சி பெறுபவர் களிடம் பயிற்சி குறித்து எடுத்துரைத்தார்.