திருச்சிராப்பள்ளி, மே 28-
திருச்சிராப்பள்ளி மருத்துவக்கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து கட்சியின் திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:
திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தின் புகழ்பெற்ற மூன்று மருத்துவக்கல்லூரிகளின் ஆங்கீகாரத்தை ரத்து செய்திருப்பது தான் தோன்றித்தனமானது. இந்த அறிவிப்பை உடனே வாபஸ் பெற வேண்டும்.
தமிழக அரசுக்குச் சொந்தமான திருச்சிராப் பள்ளியின் அடையாளமான மிகச்சிறந்த பல மருத்துவ என்பதற்கு அடையாளமாக கி. ஆ.பெ விசுவநாதம் மருத்துவக் கல்லுரி மருத்துவமனை உள்ளது. இது தவிர தமிழகத்தில் உள்ள மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை சில அற்ப காரணங்களைக் கூறி தேசிய இளநிலை மருத்துவ ஆணையம் ரத்துசெய்திருப்பது மாநில அரசின் நிர்வாகத்தில் மூக்கை நுழைப்பதாகும்.
மாநில அரசின் கட்டுப்பட்டில் உள்ள மருத்துவ மனைகளின் சில சிறிய குறைபாடுகளை ஊதிப் பெரிதாக்குகிறது ஒன்றிய அரசு. மாநில அரசின் உரிமைகளில் தலையிட்டு, அரசியல் செய்து தேவையில்லாத பதற்றத்தை உருவாக்குவதே ஒன்றிய அரசின் நோக்கமாகும்.
பணியாளர்களின் கைரேகை வருகைப் பதி வேடு குறைபாடுகள், சி.சி.டி.வி கேமரா சில செயல் படாமல் இருப்பதைக் காரணம் காட்டி அங்கீ காரத்தையே ரத்து செய்வது கண்டனத்திற்குரி யது.
இந்தாண்டுண்டு மாணவர் சேர்கைக்காக காத்திருக்கும் மாணவர்களின் மருத்துவப் படிப்பும், கடந்த நான்காண்டுகளாக படித்து வரும் மருத்துவ மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஏழு மாவட்ட மக்களுக்கு தலைமை மருத்துவ மனை போல் செயல்பட்டு வருகிறது கி.ஆ.பெ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. ஒன்றிய அரசு ஜனநாயக விரோத நடவடிக்கையைக் கைவிட வேண்டும். கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்து வக் கல்லுரி உள்ளிட்ட தமிழகத்தின் புகழ் பெற்ற மூன்று மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்ததை திரும்பப் பெறவேண்டும்.
தவறும்பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டி போராடும். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.