பாபநாசம், ஏப்.25-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது வளையப்பேட்டை. இங்கிருந்து சுவாமிமலைக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல மினி பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட வழித் தடத்தை விட்டு வேறு வழித் தடத்தில் விதிகளுக்குப் புறம்பாக இயக்கப்படுகின்றன. இதனால் விவசாயிகள், கிராமமக்கள் பாதிப்பிற்குள்ளாகி யுள்ளனர். இரவு நேரத்தில் இயக்கப்பட வேண்டிய மினி பேருந்துகளும் முறையாக இயக்கப்படுவதில்லை. இப்பிரச்சனையை கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலர் கவனத்திற்குக் கொண்டுச் சென்றும் நடவடிக்கை இல்லை. ஆட்சியராவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.