districts

img

மணப்பாறையில் சாரண-சாரணியர் இயக்க பெருந்திரளணி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி, ஜன.29 - மணப்பாறை சிப்காட் வளாகத்தில் செவ்வாயன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாரத சாரண-சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழாவை கொடி யேற்றி தொடங்கி வைத்து, அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண் டார். வைர விழா பெருந்திரளணி குறித்த  அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் உறையை வெளியிட்டார்.  உலக அளவில் இளைஞர்களுக் கான சீருடை இயக்கமாக திகழும்  சாரண, சாரணியர் இயக்கத்தின் ஜம்போரீ (jamboree) என்றழைக்கப் படும் பெருந்திரளணி ஒவ்வொரு நாட்டி லும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்தி யாவில் தற்போது வரை 18 பெருந் திரளணிகளும், 5 சிறப்பு பெருந்திரள ணிகளும் நடைபெற்றுள்ளன.  தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர்  இயக்கம் சார்பாக 2000 ஆம் ஆண்டில்  முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் சென்னை துரைப்பாக்கத்தில் சாரண, சாரணியர் இயக்க பொன்விழா பெருந் திரளணி நடைபெற்றது. இந்தியாவில் 7.11.1950 அன்று பாரத சாரண, சாரணிய  அமைப்பு உருவாக்கப்பட்டு, தற்போது  75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.  ஜன.28 முதல் பிப்.3 வரை நடைபெற  உள்ள இவ்விழாவில் பாரத சாரண,  சாரணியர் இயக்க வைர விழாவில்  தமிழ்நாடு உட்பட அனைத்து மாநி லங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சார்ந்த 20 ஆயிரம் சாரண, சாரணியர்கள்  கலந்து கொண்டு தங்கள் கலாச்சாரம், பண்பாடு குறித்த செயல்பாடுகளை நிகழ்த்திக் காட்ட உள்ளனர். இவ்விழாவில் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக் குமார், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், போக்கு வரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, கர்நாடக சட்டமன்ற பேரவைத் தலைவர் காதர் ஃபரீத், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செ.ஜோதிமணி, துரை வைகோ, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் அனில்குமார் ஜெயின், பாரத  சாரண சாரணியர் இயக்கத்தின் தேசிய  முதன்மை ஆணையர் கே.கே.கண்டேல் வால் (ஓய்வு), இயக்கத்தின் மாநில முதன்மை ஆணையர் அறிவொளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.