மயிலாடுதுறை, செப்.22- மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சியில் அரசு உதவி பெறும் ஏ.வி.சி. கல்லூரியின் தமிழாய்வுத் துறையில் திண்ணை அமைப் பின் சார்பில் பாரதிதாசன் மாணவர் கவிஞர் தமிழ் ஒளி யின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் சு.தமிழ் வேலு, உதவிப் பேராசிரியர் முனைவர் சு.விமல்ராஜ், உதவிப் பேராசிரியர் முனைவர் மா.சியாமளாதேவி, தமி ழாய்வுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செல்வ கனிமொழி, திண்ணை இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.சியாமளா ஜகதீஸ்வரி, தமிழாய்வுத் துறை அலுவலர் கோ.பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதுகலைத் தமிழ் மாணவர் ம.சபரிராஜன், இளங் கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவர் லோ.திவ்யா ஆகி யோர் தமிழ் ஒளி கவிதைகளை உணர்ந்து வாசித்தனர். நிகழ்வில் தமிழாய்வுத் துறை, மாணவ, மாணவியர்கள், பிற துறைப் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.