திருச்சிராப்பள்ளி, ஆக,19- 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்.எஸ்பிஇ (தொழிலாளர் நல சட்டம்) 1976 சட்டத்தை அமலாக்க வேண்டும். முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி பிரச்ச னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நான்கு அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதி கள் சங்கம் திருச்சி கிளை சார்பில் திங்கள் அன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டச் செயலாளர் பாக்யராஜ் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநில செயலாளர் செல்வராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினர். இதில் ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.