திருச்சிராப்பள்ளி, டிச.20 - மாநிலங்களவையில் அம்பேத் கரை அவமதிக்கும் வகையில் அமித்ஷா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறு கின்றன. இதனொரு பகுதியாக டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்க ளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருச்சிராப்பள்ளி திருச்சி அரிஸ்டோ ரவுண்டா னாவில் உள்ள அம்பேத்கர் சிலை முன் அம்பேத்கர் முகமூடி அணிந்து வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்டச் செயலாளர் சேதுபதி தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி மாநகர் மாவட்டத் தலைவர் லெனின், பகுதி செயலாளர் சந்தோஷ், ஒன்றிய தலைவர் மதியழகன், மாவட்டக் குழு உறுப்பினர் யுவ ராஜ், பகுதி தலைவர் பிரபாகரன், இளம்பெண்கள் துணை கன்வீனர் அபிராமி ஆகியோர் பேசினர். தஞ்சாவூர் இந்திய மாணவர் சங்கம் மன்னர் சரபோஜி கல்லூரி கிளை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலை வர் ரஞ்சித் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் பிரேம்குமார், கிளை நிர்வாகி சரோஜினி, மாவட்டத் தலைவர் அர்ஜுன் ஆகி யோர் கண்டன உரையாற்றினார்
கும்பகோணம்
கும்பகோணம் தபால் நிலை யம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். மத்திய குழு உறுப்பினர் பெ.சண்முகம் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற் குழு - மாவட்டக் குழு உறுப்பி னர்கள், மாநகர செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விசிக சாலை மறியல்
தஞ்சாவூர் தலைமை அஞ்சல கம் அருகே விடுதலைச் சிறுத்தை கள் கட்சியினர் வியாழக்கிழமை மாலை சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். போராட்டத் துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர்கள் கோ. ஜெய்சங்கர் (மைய), இடி முரசு இலக்கணன் (மாநகர) தலைமை வகித்தனர்.
திருவாரூர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் ஒன்றிய, நகர குழு சார்பில் புதிய ரயில் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் நகரச் செயலாளர் எம்.டி.கேசவராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.சுந்தரய்யா முன்னிலை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.முருகை யன் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு - மாவட்டக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் திரு.வி.க அரசு கலை அறி வியல் கல்லூரி முன்பு மாவட்டத் துணைச் தலைவர் வி.சந்தோஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் உருவப் படத்தை கையில் ஏந்தி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா விற்கு கண்டனம் தெரிவித்தனர். மாவட்டச் செயலாளர் சுகதேவ், கிளைச் செயலாளர் செல்வபிர காஷ், மாவட்ட துணைத் தலைவர் வைகைச் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர் சங்கத்தின் சார்பாக குடவாசல் அரசு கலைக் கல்லூரி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கல்லூரி கிளை செயலாளர் க.கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் எம்.கே.வைகை கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரா.ரஞ்சித் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றி யச் செயலாளர் டி.சண்முகம் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். இராதா கண்டன உரையாற்றினார்.
மன்னார்குடி
கோட்டூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் கே.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி கண்டன உரை யாற்றினார். கரூர் சிபிஎம் சார்பில் கரூர் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கட்சியின் கரூர் மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் காந்தி பூங்கா முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எம்.வெங்க டாசலம், மனிதநேய மக்கள் கட்சி நகரத் தலைவர் ஜபருல்லா ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மணிவேல், பி.துரைசாமி, கே.கந்த சாமி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.பத்மாவதி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். ரவீந்திரன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் இ.மைதீன்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, மமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் மாதர், வாலிபர், மாணவர் சங்கங்களின் ஒன்றிய, மாவட்ட, மாநில உறுப்பி னர்கள் பங்கேற்றனர்.