மக்கள் குறைகேட்பு கூட்டம்
அரியலூர், பிப்.5- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத் தில் 362 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெற்ற பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கு மாறு சம்பந்தப்பட்ட அலு வலர்களுக்கு உத்தர விட்டார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் கூடு தல் நேர்முக உதவியா ளர் (நிலம்)பவானி, தனித் துணை ஆட்சியர் இளங்கோவன் மற்றும் அனைத்துத் துறை அலு வலர்கள் கலந்து கொண்டனர்.
இலவச கழிவறை பயன்பாட்டுக்கு வருமா?
திருவாரூர், பிப்.5 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சிக் குட்பட்ட குடவாசல் கடை வீதியில் இலவச கழி வறை ஒன்று உள்ளது. இதை 30 ஆண்டுகளுக்கு மேலாக வர்த்தகர்கள், கோயிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்தக் கழி வறை பூட்டி வைக்கப் பட்டுள்ளது. இதனால் வர்த்தகர்கள், பொது மக்கள் மிகவும் அவதிக் குள்ளாகின்றனர். உடனடியாக இலவச கழி வறையை மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனக் கோரி குடவாசல் பேரூராட்சி செயல் அலுவலரிடம், சிபிஎம் குடவாசல் நகரக் குழு செயலாளர் டி.ஜி. சேகர் மனு அளித்துள்ளார்.
குரூப்-4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு
புதுக்கோட்டை, பிப்.5 - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் 2024 ஆம் ஆண்டிற் கான தொகுதி-4 போட்டித் தேர்வுக்கான அறி விப்பை 30.1.2024 அன்று 6,244 காலிப் பணியி டங்களுக்கு வெளி யிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் அறிவித்துள்ள தொகுதி-4 தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் புதுக் கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மைய வளாகத் தில் சிறந்த வல்லுநர் களைக் கொண்டு 8.2. 2024 அன்று காலை 10 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. எனவே போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர் கள், இந்த நேரடி பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க, தங்களது 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் வர வேண்டும். இந்த பயிற்சி வகுப்பு களில் சேருவது தொ டர்பாக புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 043322-222287 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
பிப்.10-இல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
புதுக்கோட்டை, பிப்.5- பிப்ரவரி 10 அன்று புதுக்கோட்டையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, களமாவூ ரில் உள்ள மூகாம்பிகை பொறியியல் கல்லூரி வளா கத்தில் காலை 8 மணி முதல் மதியம் 3 வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. முகாமில் தொழில்துறை, சேவைத் துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழி காட்டல், சுயதொழில், வங்கி கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பிரத்யேக அரங்கம் அமைத்து ஆலோ சனை அளிக்கப்பட உள்ளது. 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும், வேலைநாடும் இளைஞர்கள் “தமிழ்நாடு தனி யார்துறை வேலை இணையம்” www.tnprivatejobs.tn.gov.in வாயிலாக இவ்வேலை வாய்ப்பு முகாமிற்கு முன்பதிவு செய்தும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
நூறு ஆண்டு கனவு நிறைவேறியது திருபுவனம் மக்களுக்கு பட்டா கிடைத்தது
கும்பகோணம், பிப்.5- மக்களுடன் முதல்வர் முகாம் மூலம் விண்ணப்பித்து பட்டா பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சரு க்கு நன்றி தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் வட்டம் திருபுவனத்தில் நூறு ஆண்டுகளாக பட்டா இல்லாமல் வசித்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு, திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினரும் அரசு தலை மைக் கொறடாவுமான கோவி.செழி யன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் திருவிடைமருதூர் வட்டம் திருபுவனம் கிராமம் புல எண்.520/1 பரப்பு, 6.38.0 ஹெக்டேர் அரசு புறம் போக்கு நிலுவை இனம் என்ற வகைப்பாடுள்ள நிலம், திருபுவனம் பொதுமக்களின் வசிப்பிடங்களுக்கு பட்டா வழங்கிட ஏற்ற வகையில் வகை மாற்றம் செய்யப்பட்டது. பின்பு, திருபுவனம் கிராம பொதுமக்கள் சார்பில் 2023 டிச.21 அன்று திருபு வனத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பட்டா வழங்கக் கோரி மனுக்கள் அளிக்கப்பட்டன. அதன்படி 2024 ஜன.19 அன்று தஞ்சையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரால் 20 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள 239 பயனாளிகளுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் பட்டா வழங்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து திருபுவனத்தைச் சேர்ந்த அலாவுதீன், வரலட்சுமி, அழகிரி சாமி ஆகியோர் கூறுகையில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா இல்லாமல் இருந்த எங்கள் குடும்பத் திற்கு பட்டா வழங்கிய தமிழக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோருக்கு நன்றி தெரி வித்தனர்.
ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பிப்.8-இல் ஆர்ப்பாட்டம்
அரியலூர், பிப்.5 - ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பிப்.8 அன்று மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட்ட அலுவலகத்தில் திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட துணைச் செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இளங்கோவன், காங்கிரஸ் நகரச் செயலாளர் சிவக்குமார், விசிக கிழக்கு மாவட்டச் செயலா ளர் கதிர்வளவன், அரியலூர் தொகுதி செயலாளர் மருத வாணன், மமக தலைவர் பர்கர் சாகுல் அமீது, விசிக அமைப்பு செயலாளர் சின்னராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, மாநில முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கூட்டணி கட்சிகள் சார்பாக பிப்ரவரி 8 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
திருவள்ளுவர் போட்டித் தேர்வு பயிற்சிக் கூடம் துவக்க விழா
தஞ்சாவூர், பிப்.5- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி திருவள்ளுவர் கல்விக் கழகம் மற்றும் நகர வர்த்தகர் கழகம் இணைந்து நடத்தும் திருவள்ளுவர் போட்டி தேர்வு பயிற்சி கூடத்தின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இரா.திருமலைச்சாமி சிறப்புரையாற்றி னார். கல்விக் கழக பொறுப்பாளர் த.பழனிவேல் தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மெய்ச்சுடர் நா.வெங்க டேசன் வரவேற்றார். பட்டுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் த.சுகுமார், மருத்துவர் துரை.நீலகண்டன், வர்த்தகர் கழக தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பயிற்சி கூட பயிற்றுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி யின் நோக்கம் குறித்து வட்ட சார் ஆய்வாளர் ரெ.சந்தோஷ் விளக்கிக் கூறினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்து கொண்டனர். இந்த இலவச சிறப்புப் பயிற்சி வகுப்புகள், ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பேராவூரணி நகர வர்த்தகர் கழக கட்டிடத்தில் நடைபெறும் என்றும், பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாண வர்கள் சனிக்கிழமை நடைபெறும் வகுப்பில் நேரடியாக பெயரினை பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ள லாம் என்றும் பயிற்சிக் கூடம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமுஎகச-வின் குழந்தைகள் படைப்பாக்க முகாம்
தஞ்சாவூர், பிப்.5- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கிளையின், ‘குழந்தைகள் படைப்பாக்கம் உபகுழு’ சார்பாக, குழந்தை கள் படைப்பாக்க 2 ஆவது முகாம் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. முகாமிற்கு கிளைத் தலைவர் முருக.சரவணன் தலைமை வகித்தார். முகாம் ஒருங்கிணைப்பாளர் சரிதா பாலா வரவேற்று, நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். முகாமை முன்னாள் வட்டாட்சியர் க.கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் ஓவியம் வரைதல், களிமண் சிற்பம், காகிதக்கலை, விளையாட்டு, பாடல்கள், புத்த கம் வாசித்தல் ஆகியவை நடைபெற்றன. இதில் 40 குழந்தைகள் பங்கேற்றனர். புத்தகம் வாசிப்பில் பெற் றோர்களும் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் தி.தனபால், கிளை துணைத் தலைவர் தி.வாஞ்சிநாதன், கிளைப் பொரு ளாளர் கே.பக்கிரிசாமி, செயற்குழு உறுப்பினர் பாக்யபாலா, மருத்துவர் வீரமணி, கொண்டிகுளம் கிளைத் தலைவர் வீ.சாமிநாதன், செயலாளர் ஆசைத்தம்பி, ஆசிரி யர் ரஞ்சித், டைலர் மாணிக்கம் ஆகியோர் பங்கேற்ற னர். பொறியாளர் மணிமாறன் நன்றி கூறினார்.
திருச்சி மாநகரப் பகுதிகளில் கொசு மருந்து அடிக்க கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, பிப்.5- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ராஜேஷ் கண்ணா மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத் துப் பகுதிகளிலும் கொசு மருந்து அடித்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. சில பகுதி களில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இதனால் மாநகராட்சி உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கொசு அதிகமாக உள்ளது. கொசுக்கடியால் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் மற்றும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. தற்சமயம் மாநகராட்சிப் பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்று வருகிறது. மாதம் ஒருமுறை கொசு மருந்து அடித்திருந்தால் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்த வேண்டிய அவசியமில்லை. எனவே மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலன் கருதி மாதம் ஒருமுறை அனைத்துப் பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்த போது, சங்கத்தின் மாவட்டத் தலைவர் தங்கதுரை, மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.