திருச்சிராப்பள்ளி,அக்,13, 20 ஆயிரம் பணியிடங்களுக்கு நடத் தப்படும் எஸ்எஸ்சி தேர்வுகளை தமிழில் நடத்திட கோரியும், இந்தித் திணிப்புக்கு எதி ராகவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வியாழனன்று திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் லெனின் தலைமை வகித்தார். மாநில இணை செயலாளர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சேதுபதி நன்றி கூறி னார். மாவட்டக் குழு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.