தஞ்சாவூர், ஆக.19 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம், வீரக்குறிச்சி ஊராட்சி, ஆலடிக்கு முளை ஊராட்சி ஆகிய பகுதி மக்களின், அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், வீரக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் கு. பெஞ்சமின், ஏ.உலகநாதன், சுக்கிரன்பட்டி, கிளைச் செய லாளர் ஆர். ஞானசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் எம்.செல்வம், பக்கிரிசாமி, மாதவன், இளங்கண்ணன், சூசைராஜ், ரெ.ஞானசூரி யன், மோரீஸ் அண்ணாதுரை, சாமிநாதன், பட்டுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினர் சதா. சிவகுமார், பாலதண்டாயுதம் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், “வீரக் குறிச்சி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்குச் சொந்தமான இடத்தை, சின்ன ராணி என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்ற வேண்டும். பள்ளிக்குச் சொந்தமான இடத்தை வருவாய்த்துறை தவறுதலாக தனிநபருக்கு பட்டா வழங்கியதை ரத்துச் செய்ய வேண்டும். அந்த இடத்தில், அங்கன்வாடி கட்டிடம் கட்ட வேண்டும். மழைக்காலங்களில் தெருக்களில் மழை நீர் தேங்கி கொசுத் தொல்லை-சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, நசிவினி ஆறு வரை கான்கிரீட் வடிகால் வாய்க்கால் அமைத்துத் தர வேண்டும். சுக்கிரன்பட்டி ஊரணி குளம் சுடு காட்டுப் பாதையை சிமெண்ட் சாலையாக மாற்ற வேண்டும். சுக்கிரன்பட்டி வடக்குத் தெருவில், நீண்ட காலமாக பழுதடைந்துள்ள சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் தெருவிளக்கு அமைத்துத் தர வேண்டும். சுக்கிரன்பட்டி பகுதியில் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் உள்ள பாசன வாய்க்காலை மராமத்து செய்ய வேண்டும். 100 நாள் வேலையை நிரந்தர மாக வழங்க வேண்டும்” என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.