districts

img

100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம்

 புதுச்சேரி, ஜூலை 2- 100 நாள் வேலை  திட்டத்தில் நாளொன்றுக் கான சம்பளம் ரூ. 600 ஆக உயர்த்தி வழங்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரியில்  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் திட்ட பயனாளிகளுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் விபத்து ஏற்பட்டால் உரிய நிவாரணத்தை தங்கு தடை  இன்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடை பெற்றது.  புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதி ரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின்  புதுச்சேரி மாநில  தலைவர் வின்சென்ட் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர்  தமிழ்ச்செல்வன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். விவசாயி கள் சங்க மாவட்ட தலை வர் தமீம், விவசாய தொழி லாளர் சங்க புரவலர்கள் கலியபெருமாள், திவ்ய  நாதன், நிர்வாகிகள் பாக்யராஜ், பால்ராஜ், பிரகாஷ், தமிழரசி உட்பட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.