districts

img

நூறுநாள் வேலையை முழுமையாக வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி, ஆக.17 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதியில் அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றியத் தலைவர் கே.ஆர்.பழனியப்பன் தலைமையில் நடை பெற்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன், சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் பி.ராமசாமி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் கே.சண்முகம் சிறப்புரையாற்றினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் நான்கு மாதங்களாக முழுமையாக வேலை வழங்காமல் கிராமப்புற ஏழைகளை துயரத்தில் தள்ளுவதை கை விட்டு வேலை அட்டை பெற்றுள்ள அனை வருக்கும் முழுமையாக வேலை வழங்க  வேண்டும். கட்டுமானப் பணிகளை திட்டத் தில் புகுத்தி, திட்டத்தின் பயனாளிக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பை தட்டிப் பறிப்பதை கைவிட வேண்டும். தினக்கூலி ரூ.319-ஐ முழுமையாக வழங்கிட வேண்டும். ஒன்றிய பட்ஜெட்டில் குறைந்தபட்சம் 2  லட்சம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். வேலை நாட்களை 200 நாட்களா கவும், தினக்கூலியை 600 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தினர்.