districts

img

பொய் வழக்கை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 1-  நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம்  மற்றும் எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக் கம் ஒருங்கிணைப்பாளர்கள் மீது ஏஜி  நிட்ஸ் சாய ஆலை நிர்வாகத்தினர் பொய் புகார் கொடுத்து வழக்கு பதிவு  செய்துள்ளதாகக் கூறி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு திங்களன்று கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நீர்நி லைகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும்  எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தினர்  கூறுகையில், திருப்பூர் வீரபாண்டி பகுதி யில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் ஏஜி நிட்ஸ் சாய ஆலை நிர்வாகத் தினர் வீரபாண்டி காவல் நிலையத்தில்  தமிழ்நாடு நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் எட்டு வழி சாலை  எதிர்ப்பு இயக்கம் ஒருங்கிணைப்பா ளர்கள் மீது பொய் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏஜி  நிட்ஸ் தொழிற்சாலை எந்த விதிமுறைக ளையும் பின்பற்றாமல் நொய்யல் ஆற் றங்கரையில் சாயக் கழிவுகளை வெளி யேற்றி வருகிறது. சட்டப்படி ஆற்றின் கரையோரங்களில் சாய ஆலை அமைக்க கூடாது. இருப்பினும் சட்டத் திற்கு புறம்பாக சாய ஆலை செயல்ப டுகிறது. இதுகுறித்து விசாரிக்க சென்ற வர்கள் மீது பொய் புகார் அளித்து வழக்கு பதிந்துள்ளது. நிறுவனத்தின் பொய் புகாரின் அடிப்படையில் வழக்கு  பதிந்த ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விதிமுறைக ளுக்கு புறம்பாக செயல்படும் ஏஜி நிட்ஸ்  நிறுவனம் மீது தக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். பொய் வழக்கை உடனடி யாக தள்ளுபடி செய்ய வேண்டும் என  கூறினர்.