districts

img

ஒன்றிய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஜூலை 22- விவசாய நிலங்களில் காட்டுப்பன்றி மற்றும் வனவிலங்குகள் மூலம் பயிர் சேதம் ஏற்படாத வகையில், ஒன்றிய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.  அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.இளவரசன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் ஆர்.மணிவேல் கண்டன உரை யாற்றினார். ஜெயங்கொண்டம் ஒன்றி யச் செயலாளர் தியாகராஜன், தமிழ் நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மகாதே வன் தா.பழூர் ஒன்றியச் செயலாளர் உத்திராபதி, அரியலூர் ஒன்றியச் செய லாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன், செந் துறை ஒன்றியச் செயலாளர் கு.அர்ச்சு னன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். விவசாய நிலங்களில் நெல், கரும்பு,  வாழை, நிலக்கடலை, மக்காச்சோளம்,  மரவள்ளி கிழங்கு போன்ற பயிர்களை  சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை, வாய்வழி மருந்து வைத்து விவசாயி கள் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும். வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத் தாத வகையில், வனத்தின் ஓரங்களில் உரிய தடுப்பு முறைகளை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்.  வனவிலங்குகளால் பயிர் சேதம்  ஏற்பட்டால் அதற்குரிய இழப்பீடு தொகையை ஒன்றிய-மாநில அரசுகள்  வழங்க வேண்டும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் மும்முனை மின்சாரம் 14 மணி நேரமும் தொடர்ச்சி யாக கிடைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். இலவச மின்மோட்டார் கேட்டு காத்திருக்கிற விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். 60 வயது முடிந்த அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூ தியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.