திருவாரூர்/தஞ்சாவூர், செப்.26- ஜனநாயக முறையில் போராடிய விவசாயிகள் சங்கத் தலைவர்களை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகை யில், செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கரும்பு விவசாயிகள் சங்கத் தின் மாநில பொதுச் செயலாளரும், அகில இந்திய விவ சாயிகள் சங்கத்தின் துணைத் தலைவருமான டி.ரவீந்தி ரன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் உள்ளிட்ட தலை வர்களை காவல்துறையினர் அராஜகமான முறையில் கைது செய்துள்ளனர். தலைவர்களை கைது செய்த காவல்துறையை கண்டித்து திருவாரூர் மாவட்டம் குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. குடவாசல் நகரச் செயலாளர் டி.ஜி.சேகர், ஒன்றி யச் செயலாளர் எம்.கோபிநாத் மற்றும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க செயலாளர்கள் டி.ஏ. சரவணன், எஸ்.கிருஸ்வநாதன் மற்றும் ஒன்றிய, நகர உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்த சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். பேராவூரணியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மூத்த தோழர் வீ.கருப்பையா, சேது பாவாசத்திரம் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.