districts

img

சிறுபான்மையினர் மீது தாக்குதல்: கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர், ஆக.10 -  வட மாநிலங்களில் சிறுபான்மை முஸ்லீம், கிறிஸ்தவர்கள் மீது தொடர் தாக்கு தல் நடத்துவதை கண்டித்தும், மாட்டுக்கறி, புல்டோசர் அரசியல் கலாச்சாரங்களை கண்டித் தும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.ஹோச்சுமின் தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது முன்னிலை வகித்தார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட பொறுப்பாளர் மா.ஜோதிபாசு, மாநிலச் செயலாளர் வ.கல்யாணசுந்தரம், மாவட்ட நிர்வாகிகள் வி.கணேசன், எம். தண்டபாணி ஆகியோர் கண்டன உரையாற்றி னர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூர்  மாவட்டத் தலைவர் கா.கந்தசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், மாவட்ட நிர்வாகிகள், கரூர் ஒன்றிய பொறுப்பா ளர் எம்.ராஜேந்திரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட  பொருளாளர் பி.ராஜீவ்காந்தி நன்றி கூறி னார்.