திருச்சிராப்பள்ளி, ஜூன் 17- ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மல்லியம் பத்து ஊராட்சி அமைய நல்லூர் கிராமத்தில் பொது கழிப்பிடம் கட்டித்தர வேண்டும், சீரான மின்சாரம் வழங்க வேண்டும், வாசன் வேலியில் மக்கள் நடமாட விடாமல் தடுத்து கட்டப்பட்ட தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் புதனன்று சோமரசம்பேட்டை கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கவிதா தலைமை வகித்தார். மாநகர் மாவட்டத் தலைவர் ரேணுகா, மாவட்ட செயலாளர் சரஸ்வதி, பகுதிச் செயலா ளர் லலிதா ஜான்சி, வாலிபர் சங்க முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் சந்திரபிரகாஷ், கிளை பொறுப்பாளர் மாணிக்கம் ஆகியோர் விளக்கிப் பேசினர். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.