districts

img

மீண்டும் பணி வழங்க கோரி புங்கே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 17- திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள புங்கே இந்தியா தொழிற்சாலையில் சட்ட  விரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட தொழி லாளர்களுக்கு உடனே வேலை வழங்க வேண்டும். இறந்த தொழிலாளர்களின் குடும் பங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். தொழிலாளர் துறை பேச்சுவார்த்தையில் காலதாமதம் செய்வதைக் கைவிட்டு உடனடி யாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி புங்கே இந்தியா நிரந்தர  தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் செவ்வாயன்று தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அபிஷேகபுரம் பகுதி குழு  செயலாளர் வேலுசாமி தலைமை வகித்தார்.  ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிபிஎம் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, சிஐடியு மாநகர்  மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், கூட்டுறவு  ஊழியர் சங்க தலைவர் வின்சென்ட் ஆகியோர்  பேசினர். இதில் தொழிலாளர் சங்க நிர்வாகி கள், பகுதிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

;