அரியலூர், செப்.25 - கட்டுமானப் பொருள்களின் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பை நிறுத்த வேண்டும் என இந்திய கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. அரியலூரில் புதன்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் 9 ஆவது மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.சேசப் பெருமாள் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன் தொடக்க வுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பி. துரைசாமி வேலை அறிக்கை வாசித்தார். இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சங்கத் தின் மாநில துணைப் பொதுச் செயலர் வி. கிருஷ்ணமூர்த்தி நிறைவுரையாற்றினார். நிர்வாகி எஸ்.சுப்பிரமணியன் நன்றி கூறி னார். முன்னதாக அச்சங்கத்தினர் அண்ணா சிலையில் இருந்து மாநாடு நடைபெறும் மண்டபம் வரை பேரணியாகச் சென்றனர். இம்மாநாட்டில், ஆட்சியர் தலைமை யில் 3 மாதத்துக்கு ஒருமுறை மாவட்ட கண்கா ணிப்புக் கூட்டம் நடத்த வேண்டும். கட்டுமா னப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப் படுத்த வேண்டும். தில்லி மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வழங்குவதைப் போன்று தமிழகத்திலும் கட்டுமான நல வாரிய தொ ழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிர மாக உயர்த்தி வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதிலேயே ஓய்வூ தியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் தொழிலாளி உயிரிழந் தால் அவரது குடும்பத்துக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை போனஸ் தொகை ரூ.5 ஆயிரத்தை ஒரு மாதத் திற்கு முன்பே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.