districts

திருச்சி முக்கிய செய்திகள்

மின்சாரத் துறையை தனியார்  மயமாக்குவதை கைவிட கோரிக்கை

பெரம்பலூர், நவ.3 - பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகத்தில் மின்னரங்க கமிட்டி மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சி.பி. வீர முத்து கொடியேற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  அகஸ்டியன் துவக்க உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ரமேஷ் வாழ்த்துரை  வழங்கினார். எஸ்.இராஜேந்திரன் நிறைவுரையாற்றினார்.  மாநாட்டில், மின்சாரத் துறையை தனியார் மயமாக்கு வதை கைவிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு மின்சார வாரியமே சம்பளம் கொடுக்க வேண்டும். அவர்களை  அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும். 01.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு  குறித்து பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும். உச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் மின்வாரியத்தில் புகார்  கமிட்டி அமைத்திட வேண்டும். பெரம்பலூர் கோட்டத்தை பெரம்பலூர் மற்றும் பெரம்பலூர் கிராமியம் என்று இரு  கோட்டங்களாக பிரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியை  ஓய்வூதியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்

தஞ்சாவூர், நவ.3 -  இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியை ஒன்றிய, மாநில அரசு ஓய்வூதியர்கள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என பட்டுக் கோட்டை கோட்ட அஞ்சல் துறை தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  இதுகுறித்து பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் துறை தலைவர் ரகுராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஓய்வூதியம், ஓய்வூதியர் நலத்துறை மற்றும் ஆதார் ஆவணம் வழங்கும் ஆணையம் ஒத்து ழைப்புடன் ஓய்வூதியர்களின் வசதிக்காக முன்னர் பின்பற்றப்பட்ட காகித முறையிலான ஓய்வூதிய சான்றிதழ் சமர்ப்பித்தல் முறையை புதுப்பித்து, டிஜிட்டல் முறையிலான எளிமை யான உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.  இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இல்லம் தேடி  வங்கி சேவை மூலம் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பித்தல் சேவையை வழங்கி வருகிறது. இதில் மாநில, ஒன்றிய மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம்  ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர் களும் பயன்பெறலாம். இதனால் ஓய்வூதியர்கள் தங்கள் ஓய்வூதி யம் பெறும் அலுவலகத்திற்கோ, வங்கிக்கோ சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் அலைச்சல் தவிர்க்கப்படுகிறது. தங்கள் வீட்டில்  இருந்தபடியே அருகில் உள்ள அஞ்சலகத் திலோ, அஞ்சலகம் மூலம் அமைக்க பெறும் முகாம்களிலோ ஓய்வூதியர் தங்களது உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.  இதன் மூலம் ஓய்வூதியர்கள் உயிர் வாழ்  சான்றிதழை சமர்ப்பித்ததும், அது பரிசீலிக்கப் பட்ட உடன் ஓய்வூதியர்கள் கொடுத்த மொபைல்  எண்ணிற்கு ஓய்வூதியச் சான்றிதழ் சமர்ப்பிக் கப்பட்ட குறுந்தகவல் அனுப்பப்படும்.  இதற்கு சேவைக் கட்டணமாக ரூ. 70  மட்டும் வசூலிக்கப்படுகிறது. இந்த டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும் பும் ஓய்வூதியர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு  கொள்ளலாம். மேலும் இணையதள முகவரி மூலம் அல்லது போஸ்ட் இன்போ செயலியை  பதிவிறக்கம் செய்து தேவை கோரிக்கையை  பதிவு செய்யலாம். இந்த சேவையை வழங்கு வதற்கு அனைத்து அஞ்சலகங்களிலும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  ஒன்றிய அரசு ஓய்வூதியர்கள் மட்டுமின்றி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள், மாநில அரசு ஓய்வூதியர்கள், ராணுவ ஓய்வூதியர்கள் மற்றும் இதர ஓய்வூதியர்கள் இந்த வசதியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் கைவிரல் ரேகை பதிவு மற்றும் முக அங்கீகாரம் மூலம் உயிர்வாழ் சான்றி தழை சமர்ப்பித்து பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

திருநெல்வேலி, நவ.3-  களக்காடு தலையணையில் சனி மற்றும்  ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணி களின கூட்டம் அலை மோதியது. நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை தலையணையில், தீபாவளி  தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ஆற்றில் குளித்தும், சிறுவர் பூங்காவில் விளையாடியும் மகிழ்ச்சியுடன் பொழுது  போக்கினர். வெள்ளிக்கிழமை மணிமுத்தாறு  அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டி ருந்தது. அதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. களக்காடு வனத்துறை  ஊழியர்கள் பாதுகாப்பை பலப்படுத்தி, ஆற்று  பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நவ.9 பாளையங்கோட்டையில் மகளிர் சப் ஜூனியர் ஹாக்கி போட்டி

திருநெல்வேலி, நவ.3-  பாளை யங்கோட்டையில் மாநில அளவில் மகளிர் சப் ஜூனியர் ஹாக்கி விளையாட்டு போட்டி வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.  பாளை அண்ணா விளையாட்டு அரங்கு உட்பட 3 மைதானங்களில் நடைபெறும் இப்போட்டியில் 760 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு ஹாக்கி யூனிட், நெல்லை ஆக்கி யூனிட் ஆகியவற்றின் சார்பில் மாநில அளவில் மகளிர் சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி, பாளை அண்ணா விளையாட்டு அரங்கம் உள்பட 3 மைதானங்களில் வரும் நவ.9இல் துவங்கி 12 ஆம் தேதிவரை தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 760 வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகள வெளிப்படுத்துகின்றனர். அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 2 மைதானம், ஒரு தனியார் கல்லூரி மைதானம் என மூன்று மைதானங்களில் இப்போட்டிகள் நடக்கின்றன. இதில் முதல் 3 இடங்களை பெறும் அணிகளுக்கு வெற்றிக்கோப்பை, சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டியில் வெற்றிபெற்று தமிழக அணிக்கு தேர்வு செய்யப்படும் வீராங்கனைகள் ஹைதராபாத்தில் தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் இருந்து சென்னைக்கு  தனித்தனி சிறப்பு ரயில் இயக்க வேண்டும் கோட்ட மேலாளரிடம் துரை.வைகோ எம்.பி., கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, நவ.3- திருச்சியிலிருந்து சென்னைக்கு தனித்தனி சிறப்பு ரயில் இயக்க வேண்டு மென ரயில்வே கோட்ட மேலாளரிடம் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட வேண்டும் என ரயில்வே  கோட்ட மேலாளர், தென்னக ரயில்வே பொது  மேலாளருக்கு கடிதம் மற்றும் செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தேன்.  முதற்கட்டமாக திருச்சி மற்றும் புதுக் கோட்டை வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் வரிசை  எண் 2,5,6,7,9 திருச்சி வழியாகவும், வரிசை எண்.5 புதுக்கோட்டை வழியாகவும் இயக்கப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற் காக ரயில்வேக்கு நன்றி தெரிவிக்கிறேன். பிற  ஊர்களில் இருந்து திருச்சி மற்றும் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் ரயில் களால் கூட்ட நெரிசலை முழுவதுமாக கட்டுப்படுத்த இயலாது. ரயில் புறப்படும் ஊர்களிலேயே ரயில் களின் அனைத்து இருக்கைகளும், முன்பதி வில்லா பெட்டிகளும் நிரம்பியவாறு திருச்சி  மற்றும் புதுக்கோட்டைக்கு வந்து சேர்கிறது. எனவே இந்த ரயில்கள் திருச்சி தொகுதி மக்களுக்கு முழு பயன்தராது. குறிப்பாக நவ.3 அன்று (ஞாயிறு) திருச்சியில் இருந்து புறப்பட்டு விருத்தாச்சலம், விழுப் புரம் வழியாக சென்னை எழும்பூர் வரையும்  மற்றும் புதுக் கோட்டையிலிருந்து புறப்பட்டு  விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூர் வரையும் இரண்டு  சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என  ரயில்வே நிர்வாகத்திடம் தெரிவித்து உள்ளேன்” என்றார்.

அத்தியாவசிய மருந்துகளின் விலை  உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

பாபநாசம், நவ.3 - அத்தியாவசிய மருந்து களின் விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் தலைவ ரும், பாபநாசம் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “கடந்த மாதம் தேசிய  மருந்துகள் விலை நிர்ணய  ஆணையம், எட்டு அத்தியா வசிய மருந்துகளின்  உச்ச பட்ச விலையை, அதன் தற்போதைய விலையில் இருந்து 50 சதவீதம் அதி கரித்துக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிய வருகிறது. இந்த மருந்துகளில் பெரும்பாலானவை குறைந்த விலையுடையவை என்றும், நாட்டின் பொதுச்  சுகாதாரத் திட்டங்களில் அவசரச் சிகிச்சைகளுக்காக முதன்மையாகப் பயன் படுத்தப்படக் கூடியவை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  மருந்து உற்பத்தியில் விலையேற்றம் என்பது உற்பத்தி மூலப் பொருட்க ளின் விலை, தொழிலா ளர்களின் ஊதியம், வரி  போன்றவற்றின் அடிப்படை யில் நிர்ணயம் செய்யப்படு கிறது. இதன் நீட்சியாக இன்னும் ஏனைய மருந்துப் பொருட்களின் விலையும் உயர்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதைக் கவ னத்தில் கொள்ள வேண்டும்.  திடீரென 50 சதவீத  விலை உயர்வு என்பது  ஏழை, நடுத்தர மக்க ளுக்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கும். விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, மருந்துகளை எடுத்துக் கொள்வதை  தவிர்க்கும் சூழலுக்கு மக்கள் தள்ளப்படலாம்.  எனவே இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற  ஒன்றிய அரசு உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என கூறப்பட்டு உள்ளது.

உடையார்பட்டி குடிநீர் தொட்டியுடன்  குழாய்களை இணைக்க வலியுறுத்தல்

திருநெல்வேலி, நவ. 3- நெல்லை உடையார்பட்டியில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டியுடன், குடிநீர் குழாய்களை இணைத்து குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நெல்லை மாநகராட்சி உடையார்பட்டி, மணி மூர்த்தீஸ்வரம், சேந்தி மங்கலம் பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அப்போதைய மண்டல சேர்மனும், கவுன்சிலருமான தச்சை சுப்பிரமணியன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உடையார்பட்டிக்கு என தனியாக ஒரு மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வலியுறுத்தப்பட்டது. இதை செய்து தருவதாக அப்போதைய மாநகராட்சி அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்து, குடிநீர் தொட்டியும் அமைக்கப்பட்டது. நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் உடையார்பட்டி பகுதியில் செல்லும் பகிர்மான குழாயுடன் இணைப்புகள் ஏற்படுத்தப் படாமல் உள்ளது. இதனால் மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடையார்பட்டியில் ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ள பகிர்மான குழாய்களை புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நீர் தேக்கத் தொட்டியுடன் இணைத்தால் மட்டுமே குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரதீர்வு கிடைக்கும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

நெல்லை மாவட்டத்தில்  75 மி.மீ மழை பதிவு 

திருநெல்வேலி, நவ.3-  நெல்லை மாவட்டம் முழுவதும் 75 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அதிக பட்சமாக ராதாபுரத்தில் 22 மில்லி மீட்டரும், நம்பியாறு அணைப்பகுதியில் 10 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 9 மில்லி மீட்டர், திருநெல்வேலியில் 8.2 மி.மீட்டர், கொடுமுடி ஆறு அணைப்பகுதியில் 7 மில்லி மீட்டரும், பாளையங்கோட்டையில் 5.2 மில்லி மீட்டர், மூலைக்கரை பட்டியில் 4 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான நாலு முக்கில் 4 மில்லி மீட்டரும், ஊத்து மற்றும் காக்காச்சியில் தலா 2 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் ஒரு மில்லி மீட்டர் மழைப்பொழிவும் பதிவாகியுள்ளது.

நெல்லையில் வெங்காயம்  விலை திடீர் உயர்வு

திருநெல்வேலி, நவ. 3-  நெல்லை மாவட்டத்தில் பெல்லாரி வெங்காயத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய் விற்பனை ஆனது. பெல்லாரி வெங்காயம் 65 ரூபாய் விற்பனை ஆனது. அதே போல்  சில்லறை விலையில் ஒரு கிலோ கேரட் ரூ.100, மிளகாய் 50 ரூபாய் விற்பனை ஆனது, அத்தியாவசிய பொருட்களான இந்த காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

வனப் பகுதிக்குள் செல்ல தடை

திருவில்லிபுத்தூர், நவ.3- மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள செண்பகத்தோப்பு வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் செண்பகத்தோப்பு வனப்பகுதிக்குள் கடந்த சில தினங்களாக பெய்த  மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்வதற்கு ஞாயிறன்று வனத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தடையை மீறிபவர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை எச்சரித்துள்ளது.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இன்று குறை தீர்க்கும் முகாம்

தூத்துக்குடி, நவ. 3- தூத்துக்குடி பிஎஸ்என்எல் அலுவல கத்தில் நவ.4 திங்களன்று வாடிக்கை யாளர்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, பிஎஸ்என்எல் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  மத்திய கண்காணிப்பு ஆணையம் உத்தரவுகளுக்கு இணங்க பிஎஸ்என்எல், திருநெல்வேலி வணிக  பகுதியில் கண்காணிப்பு விழிப்புணர்வு  வாரம் அக்டோபர் 28, 2024 முதல்  நவம்பர் 3, 2024 வரை அனுசரிக்கப் படுகிறது. மேலும் மத்திய கண்காணிப்பு ஆணையம் அறிவுறுத்தலின்படி வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் முகாம் தூத்துக்குடி WGC ரோட்டில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் வரும் நவம்பர் 04 (திங்கள்கிழமை) அன்று நடை பெறுகிறது. ஆதலால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளு மாறு கேட்டு கொள்ள படுகிறார்கள். பிஎஸ்என்எல் வணிக பகுதியான திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 200  க்கும் மேற்பட்ட 4G செல் கோபுரம் அமைத்து வருகிறது. மேலும் திரு நெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 4G- பயன்பாட்டிற்கான பணி  முழு வீச்சில் நடை பெற்று வருகிறது. அனைத்து 4G உபகாரணங்களும் இந்திய தயாரிப்பு மற்றும் உயர் பாதுகாப்பு அம்சம் கொண்டது. பிஎஸ்என்எல் சந்தையில் மிக குறைந்த  விலையில் சேவைகளை வழங்கி  வருகிறது. இந்தச் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையா ளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை  மையத்தைப் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என  தெரி விக்கப்பட்டுள்ளது.