மயிலாடுதுறை, அக்.11 - மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் பேசுகையில், “திருவிடைக்கழி பூச்சாத்தனூர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும். தில்லையாடி நாகப்பன் தெருவில் உள்ள மண் சாலையை தார்ச் சாலையாக அமைத்து தர வேண்டும். தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்களின் நலன் கருதி மருதம்பள்ளம் ஊராட்சி சின்னங்குடி கிரா மத்தில் மயான சாலை அமைக்க வேண்டும். எரவாஞ்சேரி பாலம் முதல் இலுப்பூர் மாரியம்மன் கோயில் தெரு வரை தார்ச்சாலை மற்றும் நான்கு தெரு மின் விளக்குகள் அமைக்க வேண்டும். இலுப்பூர் தெற்கு தெருவில் சாலை அமைக்க வேண்டும். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு மற்றும் மதிய உணவு தயார் செய்ய தனித்தனி சமையல் கூடங்கள் அமைக்க வேண்டும். கிடாரங்கொண்டான் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிப கழக கிடங்குக்கு செல்லும் சாலையை கான்கிரீட் சாலையாக அமைத்து தர வேண்டும். செம்பனார்கோயில் வட்டா ரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களில் இரவு நேரங்களில் மருத்து வர்களை நியமிக்க வேண்டும். மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். ஆறுபாதி ஊராட்சி யில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும்” என வலி யுறுத்தினர். இதனைத் தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர், தற்போது உறுப்பினர்கள் விடுத் துள்ள கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்தார்.