districts

டெல்டா விவசாயிகளுக்கு தரமான விதைகள், உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும்

திருவாரூர், செப்.2 -  மேட்டூர் நீர் இந்த ஆண்டு டெல்டா  பகுதியில் காலதாமதமாக வந்துள்ள நிலையில், ஆற்றுப் பாசன விவசாயி கள் விவசாயப் பணிகளை துவங்கி உள்ளனர். விவசாயிகளுக்கு சம்பா பரு வத்திற்கு ஏற்ற வகையில் தரமான விதை கள், உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திரு வாரூர் மாவட்டக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சேகர், மாவட்டத் தலை வர் எஸ்.தம்புசாமி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப் பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் மைத் துறை பணிமனைகளில் புதிய ரக நெல் எதுவும் பெருமளவில் இருப்பு  வைக்கப்படவில்லை. குறிப்பாக சம்பா  பருவத்திற்கு விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் நெல் ரகங்களில் ஒன்றான சிஆர் 2009, திருச்சி 3, ஏஎஸ்டி உள்ளிட்ட மோட்டா வகைகள் இல்லை.  ஆடுதுறை 51, 52, 54, இந்த வகை  நெல் ரகங்கள் மட்டுமே கிடைக்கிறது. சில இடங்களில் ஆந்திரா கல்ச்சர் உள்ளது. மற்றபடி அதிக மகசூல் கொடுக்கக் கூடிய புதிய வகை ரகங்கள்  மற்றும் அதீத மழை, வெள்ளம்  உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை தாங்கி நிற்கக்கூடிய ரகங்கள் பெரு மளவில் இருப்பு வைக்கப்படவில்லை. ஆனால் தனியார் விதை கடைகளில் அனைத்து வகை ரகங்களும் கிடைக் கின்றன. தனியார் கடைகளில் 20 கிலோ சிப்பம் ரூ.1300, ரூ.1400 விலை யில் கிடைக்கிறது.  அரசு வேளாண்மை துறை பணி மனைகளில் 50 கிலோ மூட்டையில் உள்ளது. ஒரு கிலோ 32 ரூபாய்க்கு மானிய விலையில் கிடைக்கிறது. இத னால் விவசாயிகள் 20 கிலோ விதை நெல்லை மானியமாக பெறுகிறார்கள். மேலும் தேவையான அளவுக்கு விதை கள் கொடுக்கப்படுவதில்லை. வேளாண்மைத்துறை பணிமனை களுக்கு சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு  தினங்கள் விடுமுறை. திங்கள்கிழமை காலை, மாவட்ட அலுவலக மீட்டிங் செல்கிறோம் என்று அலுவலர்கள் சென்று விடுகிறார்கள். இதனால் விவசாயிகள் அவசரத் தேவைக்கு தனியார் கடைகளில் கூடு தல் விலை கொடுத்து விதைகளை வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.  அதைபோல் சிட்டா, அடங்கல் வழங்கு வதில் காலதாமதம் ஏற்படுவதால், கூட்டுறவு சங்கத்தில் கடன் பெறு வதும் தாமதமாகிறது. எனவே சிட்டா,  அடங்கலை உடனே வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் திறந்தவுடன் நடை பெற்ற விவசாயிகள் கருத்து கேட்பு  கூட்டங்களில், மேற்கொண்ட கோரிக் கைகளை முன்வைத்தும், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மை துறை  உயர் அலுவலர்களிடம் தெரிவித்தும்,  இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தரமான விதைகள், புதிய  ரக விதைகள் கிடைப்பதில் கால தாமதம்  உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்ற னர். மாவட்ட ஆட்சியர் விவசாயி களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் தண்ணீர் தட்டுப்பாடும் தொ டர்கிறது. மாவட்டத்தின் கடைமடை பகுதிகளில் நிலவும் சூழலுக்கு ஏற்ப உடனுக்குடன் தண்ணீரை பெற்றுக் கொடுப்பதற்கு பொதுப் பணித்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.