மயிலாடுதுறை, ஜூலை 9 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடிக்கு தமிழறிஞர் சீகன்பால்கு வந்த 318 ஆவது ஆண்டு தினம் தமிழ் சுவி சேஷச லுத்தரன் திருச்சபை (டிஇஎல்சி) சார்பில் செவ்வாயன்று கொண்டாடப் பட்டது. கிறிஸ்தவத்தை பரப்பும் நோக்கில் 1706 ஜூலை 9 அன்று தரங்கம்பாடி வந்து, தான் செய்ய வந்த பணியை பின்னுக்குத் தள்ளி வைத்து, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக உழைத்தவர் சீகன்பால்கு. இவர், இந்தியாவிலேயே முதன் முதலில் தரங்கம்பாடி அருகே கடுதாசிப்பட்டறை என்ற கிராமத்தில் காகித ஆலை, காகித கூடம் அமைத்து இந்திய மொழிகளி லேயே தமிழில் முதன் முதலில் பைபிளை இயந்திரம் மூலம் காகிதத்தில் அச்சேற்றி வெளியிட்டவர். ஓலைச்சுவடிகளிலிருந்த தமிழ் நூல்கள் பலவற்றையும் காகிதத்தில் அச்சடித்து புத்தகமாக்கி வெளியிட்டவரும், 47 ஆயிரம் சொற்களை கொண்ட தமிழ் அகராதி மற்றும் தமிழ் காலண்டர், ஆசியாவிலேயே முதல் பள்ளிக்கூடம் அமைத்து அனைத்து மக்களுக்கும் சமமான கல்வியை போதித்தவரும் இவரே. மேலும், விதவைகளை ஆசிரி யர்களாக அமர்த்தி பெண்களுக்கான கல்விக்கூடம், விடுதி, தையற்பயிற்சி பள்ளிகளை நிறுவி பெண் விடுதலைக் காக உழைத்தவருமான ஜெர்மனி நாட்ட வரான சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த 318 ஆவது ஆண்டு தினம் செவ்வா யன்று கொண்டாடப்பட்டது. முன்னதாக, தமிழ் சுவிசேஷ லுத்த ரன் திருச்சபை சார்பில் அதன் பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜ் தலைமையில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், டிஇஎல்சி செயலர் தங்க பழம் உள்ளிட்ட பலர், சீகன்பால்கு கப்பலி லிருந்து வந்திறங்கிய இடத்தில் அமைக்கப் பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் மாலை அணிவித்து பேரணியாக வந்து சீகன் பால்கு உருவச் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். இதில் டிஇஎல்சி கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், திருச்சபையினர், ஆயர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழறிஞர் சீகன்பால்கு நினைவாக தரங்கம்பாடியில் சிலையுடன் கூடிய நினைவரங்கம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தமைக்கு தமிழ் நாடு முதல்வர், துறை அமைச்சர், சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ஆகியோருக்கு நன்றி தெரி விக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியா ளர்களை சந்தித்த டி.இ.எல்.சி பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜ் தெரிவிக்கை யில், “சீகன்பால்கு நினைவாக அமைக்கப் படவுள்ள நினைவரங்கத்திற்கு மைய பகுதியில் இடம் இல்லாத நிலையில், டிஇஎல்சி சார்பில் இடம் அளிக்கப்படும். மேலும் சீகன்பால்கு முதன்முதலில் அச்சடித்த புதிய ஏற்பாடு பைபிளின் பிரதி ஒன்று 2005 இல் தஞ்சை சரஸ்வதி மஹாலில் திருடு போன நிலையில், அந்த பைபிள் லண்டனில் கண்டுபிடிக்கப் பட்டது. அதை உடனடியாக தரங்கம்பாடி கொண்டுவர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார். தொடர்ந்து சீகன்பால்கு கட்டிய புதிய எருசலேம் ஆலயத்தினுள் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் மலர் வளையம் வைத்து சிறப்பு வழிபாடு நடை பெற்றது.