தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை தஞ்சாவூர், ஜன.14- பூதலூர் தாலுகாவை, வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண் டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப்பிடம் அளித்த கோ ரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பூதலூர் தாலுகா செங்கிப்பட்டி பகுதியில், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால் ஆகிய ஆறுகளில் பாச னத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட போதிலும், அது திருச்சி மாவட்டத் திற்கு மட்டுமே, திருச்சி ஆற்றுப் பாசன கோட்டத்தால் தண்ணீர் வழங்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் பூதலூர் மற்றும் தஞ்சாவூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட எந்த ஏரிகளுக்கும், இந்த ஆண்டு ஒரு சொட்டு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை. இது விவ சாயிகளையும், பொதுமக்களையும் பெரிதும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. இதனால் இந்த தாலுகாவில் எந்த விதமான விவசாயப் பணிகளும் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வரும் கோடை மற்றும் வறட்சியை எப்படி சந்திப்பது என்றே தெரியாத நிலை உள்ளது. கால்நடைகளுக்கான தண்ணீர் தேவை மற்றும் நிலத்தடி நீரைக் கணக்கில் கொண்டு அனைத்து ஏரிகளுக்கும் ஓரிரு முறையாவது தண்ணீர் கிடைத்திட, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்க ளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். மேலும், இந்தப் பகுதியை முற்றிலு மாக வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி யாக அறிவித்து, விவசாயத்தையே நம்பி வாழும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை பாதுகாக்க நிவார ணம் வழங்க வேண்டும். பயிர்க் காப்பீடு செய்துள்ளவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைத்திடவும், நூறு நாள் வேலையை இடைவிடாது வழங்கவும், தாமதமின்றி ஊதியம் கிடைக்கவும் நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.