districts

கையுந்து பந்து, கோ-கோ விளையாட்டிற்கு மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள்

ஆட்சியர் தகவல் திருச்சிராப்பள்ளி, டிச. 9- கேலோ இந்தியா இளைஞர் விளை யாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி  ஆகிய 4 மாநகரங்களில், 26 விளையாட்டு களுக்கு 19.1.2024 முதல் 31.1.2024 வரை நடை பெறவுள்ளன. இந்த கையுந்து பந்து மற்றும் கோ-கோ ஆகிய குழு விளையாட்டுகளில் தமிழ்நாடு அணியும் இடம்பெறவுள்ளது.  தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அவர்களது சிறப் பான செயல்திறனின் அடிப்படையில், தமிழ் நாட்டைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் 12.12.2023 மற்றும் 13.12.2023 ஆகிய தேதி களில், திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் காலை 7 மணியளவில் நடைபெறவுள்ளன. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும், விளை யாட்டில் ஆர்வமுள்ள 18 வயதிற்குட்பட்ட (1. 1.2005-க்கு பிறகு பிறந்தவர்கள்) வீரர், வீராங்கனைகள், ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட், பள்ளிக் கல்விச் சான்றிதழ் (10  ஆம் வகுப்பு), பிறப்புச் சான்றிதழ் ஆகிய  ஆவணங்களுடன் பங்கேற்க அனுமதிக்கப் படுவர். தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு திறமை மற்றும்  திறன்களை மேம்படுத்த தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அந்தந்த விளையாட்டுப் பிரிவுகளில் தகுந்த  பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவ லர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப் பள்ளி. தொலைபேசி. 0431-2420685 என்ற  எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட  ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.