districts

திருச்சி முக்கிய செய்திகள்

டிச.11 குருவிக்கரம்பையில் மக்கள் நேர்காணல் முகாம் 


தஞ்சாவூர், டிச.4 -  பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு 1969 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் “மக்கள் நேர்காணல் முகாம்” என்ற திட்டம் தொடங்கப் பட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது புதன்கிழமை நடை பெற்று வருகிறது.   எதிர்வரும் டிசம்பர் 11 (புதன்கிழமை) அன்று பேராவூ ரணி வட்டம்,   குருவிக்கரம்பை சரகம்,  குருவிக்கரம்பை -1  கிராமத்தில் “மக்கள் நேர்காணல் முகாம்” நடத்திட தஞ்சா வூர், மாவட்ட ஆட்சித்தலைவரால் ஆணையிடப்பட்டுள் ளது. மேற்படி, மக்கள் நேர்காணல் முகாமில், பொது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொ டர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெற்றுக்கொள்ளலாம்.  மேலும், மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறு வதற்கு முன்னரே முன்மனுக்கள் பெறும்பொருட்டு பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை குருவிக் கரம்பை -1  கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்து பயனடை யுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார். 

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழா 

திருச்சிராப்பள்ளி,டிச,4- தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் நிகழாண்டில் ஆட்சி மொழிச் சட்ட வாரம் ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட வேண்டுமென அரசு ஆணையிட்டுள்ளது.

 இதனைத்தொடர்ந்து, தமிழ் வளர்ச்சி இயக்குநரின் ஆணையின் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி  மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 18.12.2024 முதல் 27.12.2024 வரையிலான ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்படவுள்ளது.  ஆட்சி மொழிச் சட்ட வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணி முதல் நடைபெறும். இந்த ஆட்சிமொழிச் சட்ட வார விழா தொடர்பான நிகழ்வின் ஒருபகுதியாக ஆட்சிமொழிச் சட்டம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில்  18.12.2024, 19.12.2024 மற்றும் 20.12.2024 ஆகிய நாட்களுக்கு கணினித் தமிழ்  மற்றும்  ஒருங்குறி பயன்பாடு, ஆட்சிமொழிச்சட்ட அர சாணை, மொழிப்பயிற்சி, கலைச்சொல்லாக்கம், வரைவுகள்,  குறிப்புகள் எழுதுதல், முதலிய தலைப்புகளில் திருச்சிராப் பள்ளி மாவட்ட மைய நூலகக்  கூட்ட அரங்கில் அரசுப் பணியாளர்க ளுக்கு பயிற்சியும், 23.12.2024 அன்று இருங்களுர்  எஸ்.ஆர்.எம். டி.ஆர்.பி. பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் பங்கு பெறும் பட்டிமன்றமும் 24.12.2024 அன்று தமிழ் வளர்ச்சித் துறை, தொழிலாளர் நலத்துறை யினருடன் வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் இணைந்து வணிக நிறுவனங்க ளின் தமிழில் பெயர்ப்பலகை அமைத்திட வலியுறுத்தி வணிகர்சங்கம் அலுவலகக்  கூட்டரங்கில்  கலந்தாய்வுக் கூட்டமும், 26.12.2024 அன்று தமிழ் அமைப்புகள், நிர்வாகி களுடன் இணைந்து மணிகண்டம்  ஊராட்சி ஒன்றிய அலு வலக கூட்ட அரங்கில்  ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்ட மும் நடைபெறவுள்ளன.

ஆட்சிமொழிச் சட்டவார விழாவின் முக்கிய நிகழ்வாக 27.12.2024 அன்று  காலை 9.30 மணியளவில் அரசுப் பணியா ளர்கள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், பள்ளி – கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி  மாவட்ட ஆட்சியரால் கொடியசைத்து தொடங்கி வைத்தும், மேற்படி பேரணி காந்தி சந்தை காவல்  நிலை யத்தில்  தொடங்கி மேலரண் சாலை வழியாக தெப்பக் குளம் பிஷப்ஹீபர் மேனிலைப்பள்ளியில் வந்தடையவுள் ளது என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி பிராட்டியூரில் தொடரும் எலக்ட்ரிக் பொருட்கள் திருட்டு

திருச்சிராப்பள்ளி, டிச.4- திருச்சி பிராட்டியூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. குறைவான வகுப்பறையில் மாண வர்களின் வருகை பதிவு அதிகமாக இருந்ததால் கூடுதலாக வகுப்பறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டு ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த ஒரு வருட மாக நடந்து வருகிறது. இந்நிலையில் பிராட்டியூரில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கபடி போட்டி நடத்தினர்.

பெஞ்சல் புயல் காரணமாக இடைவிடாது மழை பெய்ததால் கபடி போட்டிக்கு வந்திருந்த 30க்கும் மேற்பட்ட அணியினர் புதிய பள்ளி கட்டடத்தில் தங்கினர். இந்நிலையில் கட்டிட மேஸ்திரி பள்ளி கட்டிடத்திற்கு வந்து பார்த்த போது பூட்டியிருந்த ஒரு வகுப்பறை திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது புதிய வகுப்பறையில் இருந்த எலக்ட்ரிக்  பொருட்கள் அனைத்தும் திருடு போயிருப்பது தெரியவந்தது.  தகவலறிந்த திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல் கடந்த 20 ஆம் தேதி பிராட்டியூர் கணபதி நகரில்  சிட்டி பாபு என்பவர் நடத்தி வரும் 3டி போட்டோ பிரிண்டிங் நிறுவனத்தின் பூட்டை  உடைத்து அங்குள்ள 5 கம்ப்யூட்டரில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள ஹார்டு டிஸ்க், ரேம்ப், சாப்ட்வேர், பெண்டிரைவ், கேமரா டிஆர் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இது குறித்த புகார் நிலுவையில் உள்ள நிலையில் பிராட்டியூர் பகுதியில் தொடர்ந்து எலக்ட்ரிக் பொருட்கள் திருடு போகின்றது. மேலும் இது போன்ற திருட்டு நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.