தொடுபுழா, பிப். 5- விஷம் குடித்து தற் கொலைக்கு முயன்ற தந்தை யும் தாயும் ஏற்கனவே உயி ரிழந்த நிலையில் மகளும் உயிரிழந்தார். தொடுபுழா சித்தூர் மணக் காடு ஊராட்சி அலுவலகம் அருகே வாடகைக்கு குடியி ருந்த புல்லரைக்கல் ஆண்டனி (62), ஜெசி (56) மற்றும் மகள் சில்னா ஆண்டனி (20) ஆகி யோர் கடன் தொல்லை யால் கடந்த ஜன.30 ஆம் தேதி விஷம் குடித்து தற் கொலைக்கு முயன்றனர். ஆபத்தான நிலையில் காணப்பட்ட மூவரும் தனி யார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஜெசி ஜன.31 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கும், அந் தோணி பிப்.1 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கும் உயிரி ழந்தனர். சில்னா மயக்கத் தில் இருந்தார். இவர் தொடு புழா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிற் றுக்கிழமை காலை உயிரி ழந்தார். அந்தக் குடும்பத் திற்கு கடன் சுமைகள் இருந்த தாகக் கூறப்படுகிறது. ஜெசி தொடுபுழா நகரில் பேக்கரி நடத்தி வந்தார். அந்தோணி கூலி வேலை பார்த்து வந்தார். ஏழ்மையான நிலை யில் நெருக்கடி காரண மாக பலரிடம் கடன் வாங்கி யுள்ளனர். வீட்டு வாடகை யும் பாக்கி உள்ளது. கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து நெருக்கடி கொடுத்த தால் தற்கொலை செய்துள்ள தாக போலீசார் தெரிவித்த னர். இவர்கள் முன்னதாக அடிமாலி ஆனச்சலில் குடும் பமாக வசித்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடுபுழாவுக்கு வந்துள்ளனர். சில்னா, அல் அசார் கல்லூரியில் பிசிஏ இறுதியாண்டு படித்து வந்தார்.