districts

img

சூறைக்காற்றால் பயிர்கள், மரங்கள் சேதம்: பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆய்வு

பாபநாசம், ஜூன் 11 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே  இடையிருப்பு, கோவிந்தநல்லூர், ரெங்கநாத புரம் மற்றும் இதன் சுற்று வட்டாரப் பகுதி களில் கடந்த சனிக்கிழமை மாலை பலத்த  சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதனால்  இந்தப் பகுதிகளில் நெல், பருத்தி போன்ற விவசாயப் பயிர்களும், ஏராளமான மரங்களும்  வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின் கம்பங்கள் சேதமடைந்தன. இது குறித்த செய்தி தீக்கதிர் நாளிதழில்  வெளியானது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயப் பயிர்களை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா நேரில் சென்று பார்வையிட்டார். சேதமடைந்த வேளாண் பயிர்கள் பற்றிய முழுமையான கணக்கெடுப்பை நடத்தி அறிக்கை அளிக்க வேளாண்துறை அலுவலர்களை கேட்டுக் கொண்டார். சேதமடைந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மின் வாரிய  பணியாளர்களிடம் சேதம் குறித்த விபரங் களைக் கேட்டு, விரைந்து பணிகளை முடித்து,  தடையின்றி மின்சாரம் கிடைக்க ஏற்பாடு  செய்ய அறிவுறுத்தினார். பின்னர் பாதிக்கப பட்ட விவசாயிகளிடம் அவர்களின் கோரிக் கையை கேட்டு, உரிய இழப்பீடுகள் பெற்றுத்  தர நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித் தார். இதில் அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றி யத் தலைவர் கலைச்செல்வன், திமுக அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலர் சுரேஷ்குமார், ம.ம.க மாநில மீனவரணி செய லர் முஹம்மது அலி, தலைமை செயற்குழு  உறுப்பினர் முஹம்மது ரிபாயி உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.