districts

img

ரயில்வே துறையை தனியார் மயமாக்கக் கூடாது!

திருச்சிராப்பள்ளி, செப்.24 - ரயில்வே துறையை தனி யார் மயமாக்கக் கூடாது என  வலியுறுத்தி தட்சிண ரயில்வே எம்ப்ளாய்ஸ் யூனி யன் சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி ரயில்வே ஜங்ஷ னில் உள்ள தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர்  அலுவலகம் முன் கோ ரிக்கை அட்டை அணிந்து இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு கோட்டச் செயலாளர் கரிகாலன் தலைமை வகித் தார்.  துணை பொதுச்செய லாளர் ராஜா, உதவி கோட்ட  செயலாளர் செந்தில்குமார், டீசல் கிளை துணைத்தலை வர் ஷேக் இப்ராஹிம், மெக்கானிக்கல் கிளை பொறுப்பாளர் ஜாய் சார்லஸ்  பிக்கன்ஸ், உதவி கோட்ட செயலாளர் வேந்தன் ஆகி யோர் கண்டன உரையாற்றி னர். கோட்ட பொருளாளர் லட்சுமிபதி நன்றி கூறினார். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 8 ஆவது ஊதி யக்குழுவை உடனே  அமைக்க வேண்டும். அனைத்து காலியிடங்களை யும் உடனே நிரப்ப வேண்டும்.  ரயில்வே துறையை தனியார் மயப்படுத்துவதை கைவிட வேண்டும். போனஸ் சீலிங்கை ரத்து செய்து உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும். கோட்டம் இடையி லான மற்றும் ரயில்வே அள விலான இடமாற்றத்தை உடனே அமல்படுத்த வேண் டும். இ-பாசை பயண ஆதார மாக அங்கீகரிக்க வேண் டும். பணி நியமனத்திலும் பதவி உயர்விலும் 4 சத வீதம் பி.டபுள்யூ.டி ஒதுக் கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.