districts

மயிலாடுதுறை - பாலக்காடு இடையே பழனி வழியாக தினசரி ரயில் இயக்கம்

பாபநாசம், செப்.30 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலர் சரவணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை - பாலக் காடு இடையே நேரடி ரயில்  இயக்க சாத்தியக் கூறு களை ஆய்வு செய்து,  அதன்  பேரில் தற்போது மயிலாடு துறை-தஞ்சாவூர் இடையே இயங்கும் பயணிகள் சிறப்பு  ரயிலை பாலக்காடு டவுன் வரை நீட்டிக்க தென்னக  ரயில்வே உத்தேசித்துள்ளது.  மயிலாடுது றையி லிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக பழனியை  இணைக்கும் வகையில் நேரடி ரயில் இயக்க பல்வேறு  காலக் கட்டங்களில், தொ டர்ந்து கோரிக்கைகள் விடுக் கப்பட்டன. மயிலாடுதுறை தொகுதி முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் இராம லிங்கம், இது தொடர்பாக ரயில்வே உயரதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தஞ்சாவூர் நாடாளு மன்ற உறுப்பினர் முரசொலி யும்  தஞ்சாவூர்-பாலக்காடு இடையே புதிய ரயில் இயக்க தொடர் கோரிக்கை விடுத்து வந்தார்.  கடந்த மே மாதம் நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தாம்ப ரம்-கோவை இடையே, கும்பகோணம், தஞ்சாவூர், பழனி, பொள்ளாச்சி வழி யாக சிறப்பு ரயில் இரண்டு தினம் இயக்கப்பட்டது. அந்த ரயிலுக்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, தற்போது மயிலாடுதுறை-பாலக்காடு டவுன் இடையே  பழனி வழியாக தினசரி நிரந்தர ரயில் இயக்க தென் னக ரயில்வே முடிவு செய் துள்ளது மகிழ்ச்சியளிக் கிறது. எனவே ரயில்வே நிர்வா கம் நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை போன்ற  விழாக் காலங்கள் வருவதன் காரணமாக, நடப்பு அக்டோபர் மாதத்திலேயே புதிய ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பதே டெல்டா பகுதி  மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.  இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.