திருவாரூர்,அக்.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய 24 ஆவது மாநாடு ஆலங்குடியில் தோழர்கள் வி.கலியபெருமாள், ஆர்.மோகன், டி.விஸ்வநாதன் நினைவரங்கத்தில் அக்டோ பர் 10 வியாழக்கிழமையன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு எஸ்.இளங்கோவன், ஆர்.சந்திரோ தயம் ஆகியோர் தலைமை வகித்தனர், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமி துவக்க உரையாற்றினார், ஒன்றிய செயலாளர் என்.இராதா வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கலியபெருமாள் வாழ்த்துரை வழங்கினார், மாநாட்டில் ஒன்பது பேர் கொண்ட ஒன்றியகுழு தேர்வு செய்யப்பட்டது. புதிய ஒன்றிய செயலாளராக டி. சண்முகம் தேர்வு செய்யப் பட்டார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் நிறைவுரையாற்றினார். ஈரப்பதத்துடன் வரும் நெல்லை உலர்த்தும் ஆலை அமைக்க வேண்டும், வலங்கைமான் வட்டார மருத்துவமனையில் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும், வலங்கைமானில் அனைத்து நவீன வசதிகளுடன் பேரு ந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.