விருதுநகர், மே 3 காரியாபட்டி ஆவியூர் டி.கடமங்குளத்தில் குவாரி வெடிவிபத்தால் சேதம டைந்த குடியிருப்புகளுக்கு உரிய ஆய்வு நடத்தி நிவா ரணம் வழங்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியதாவது: வெடி விபத்து ஏற்பட்ட ஆவியூர் கிர ஷர் குவாரியில் வெடி மருந்து குடோன் செயல்பட்டு வந் தது. இக்குவாரியில் சட்ட விரோதமாக விதிமுறை களை மீறி அதிகளவில் பள் ளம் தோண்டுவதும், வெடி மருந்து அதிகம் பயன்படுத்தி இரவு நேரங்களிலும் குவாரி செயல்பட்டது. பாறைக்கான வெடிகள், வெடிக்கும்போது அதிக அதிர்வலையால் மனித உயி ருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து பல முறை வருவாய்த்துறையிட மும், குவாரி உரிமையாளர் களிடமும் புகார் அளித்துள் ளோம். ஆனால் எந்த பலனு மில்லை. இந்நிலையில், மே.,1 இல் நடைபெற்ற வெடி விபத்தினால், குடியிருப்பு கட் டடங்கள் சேதம் அடைந்துள் ளன. ஏராளமான பொருட்கள் உடைந்து போயின. 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதனால், பொது க்கள் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். ஆனால், வெடி விபத்தால் பாதிக்கப் பட்ட வீடுகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் வரவில்லை. எனவே, உரிய முறையில் ஆய்வு செய்து இழப்பீட் டிற்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும் என அதில் தெரி வித்துள்ளனர்.